படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி

நன்றி பாக்யா வார இதழ் !

படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

தண்ணீரில் முகம் பார்க்கும் பெண்ணே !
சின்னப் புன்னகையை
சிரிப்பாக விரிவு செய் !

தனிமையில் இனிமை காணும் பெண்ணே
தலைவன் வந்தால்
இன்னும் இன்பம் !

பெண்கள் இட ஒதிக்கீடு சட்டம்
நிறைவேறாத வருத்தமா உனக்கு ?
நிறைவேறும் வேண்டாம் கவலை !

குளத்தில் நீந்தும் மீன்களை ரசிக்கும்
கன்னியே உன் கண்களில் தெரிவதும்
மீன்களே !

மரங்களின் நிழலோ தண்ணீரில்
மங்கையின் நினைவோ
தலைவன் மீது !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (12-May-16, 6:59 pm)
பார்வை : 77

மேலே