காவடிச்சிந்து 4 வகை -2
வாக்கினைச் சேர்த்திடு வாயே - நாளும்
வன்மையைக் கூட்டிடு வாயே - இனி
வளமேவர நலமேதரு புகழேவரு நிலையாமதில்
நடப்பாய் - துயர்
துடைப்பாய்
தாக்கிடும் தீமைகள் நீங்க - நல்ல
தன்மைகள் நம்மிடம் ஓங்க - என்றும்
தனமேவரு நிலையேதர வரமேதரு நாளாமதில்
தாழும் -தீமை
வீழும்
கவிதையாக்கம் - திருமதி.மஞ்சுளாரமேஷ்