சுதந்திர வாழ்க்கை

கருவறை மறந்த சிசுவால்
என் தமிழ் மொழி பேச்சு
கிசு கிசுவாச்சு...

தாயின் முலைப்பால் குடித்தவனுக்கு
ஒரு போதும் வலிமை குறையாது

ஒரு தமிழனுக்கு
வீரம் இல்லையென்றால்
அவன் குடித்தது
வெறும் புட்டிப் பால்தான்

ஒரு தமிழனைத் தமிழன் ஆதரிக்காமல்
அவன் ஒரு ஆங்கில அந்நியனோடு
கைகுலுக்கி உறவாடுவது எதற்கு?

மீண்டும் நான் அடிமை என்பதற்கே!

அண்டைய மொழிகளோடும்
அந்நிய நாட்டோடும்
நட்புறவு கொள்வதில்
தப்பொன்றும் இல்லை - தமிழா!

தன்மானத்தை எவரிடமும்
விட்டுக் கொடுத்து விட்டு
தமிழ் தாயை கொன்று விட்டு
தன் கையைக் கட்டிக்கொண்டு
சிறை கைதியாய்
அடிபட்டு அடைபட்டு
ஒரு ஆங்கில மொழிக்கு
அடிமையாய்...
தினம் நீ வாழ்வதுதான்
(சு)தந்திர வாழ்க்கையா?

ஒரு தமிழனோடு
செம்மொழியில் பேசிடு!

எழுதியவர் : கிச்சாபாரதி (22-May-16, 4:44 pm)
பார்வை : 126

மேலே