அவன்பால் அன்பால்

அவன்பால்... அன்பால் ...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புலரும் பொழுதுகளை
எனக்காக்கித் தந்துவிடு
பூமியில் தாரகையைப்
பூக்க நீ செய்துவிடு
அலரும் இமைக்கு முன்னே
அழகாய் நீ சிரித்துவிடு
அதுபோதும் என்று சொல்லும்
ஆதிக்க முத்தமிடு
ஒருகூடை அன்பூற்றி
உறைய நான் செய்துவிடு
ஒருபோதும் அகலாமல்
ஒன்றாக இருந்துவிடு
அழுதிட்ட நாட்கலெலாம்
ஆறட்டும் மாற்றிவிடு
அப்பா நான் இதற்காக
ஆகிநின்றேன் உயிர்க்கூடு


... மணிமீ
24-Apr-16

எழுதியவர் : மீ.மணிகண்டன் (24-May-16, 12:12 pm)
பார்வை : 129

மேலே