துரோகம்

விழியில்
விழுந்தாய்
உயிரில்
கலக்கும் முன் !

"உன்னக்கு நான்"
என்ற
வார்த்தைகளை
வெறும் வாய்
மொழிகளோடு
விட்டுச்சென்றாய் !

கண்களில்
காந்தத்தை
வைத்து விட்டு
தூண்டில் மீன்களாய்
ஆட்டிப் படைத்தாய்
பெண்களை !

தேனொழுகும் வார்த்தைகள்
தேக்குமர இதயமும்
மெழுகாய்
உருகிவிடும் !

கரும்பாய்
காதல் மொழிகள்
இரும்பு
இதயமும்
துரும்பாய்
போயிடும் !

காதலை
படைத்த
இறைவனும்
கண்டு பிடித்து
விடலாம்...
"கலப்படமில்லா காதலை"

ஆனால்
நீ
நினைவை
நனவாக்கி
சுகத்தை
எடுத்துக்கொண்டு
சோகத்தை
விட்டுச்சென்றவன் !

நீ
செய்த
"துரோகம்"
காதலிக்கு அல்ல
காதலுக்கு !!!

எழுதியவர் : தேன்மொழி மதன்குமார் (26-May-16, 3:21 pm)
Tanglish : throgam
பார்வை : 194

மேலே