துரோகம்
விழியில்
விழுந்தாய்
உயிரில்
கலக்கும் முன் !
"உன்னக்கு நான்"
என்ற
வார்த்தைகளை
வெறும் வாய்
மொழிகளோடு
விட்டுச்சென்றாய் !
கண்களில்
காந்தத்தை
வைத்து விட்டு
தூண்டில் மீன்களாய்
ஆட்டிப் படைத்தாய்
பெண்களை !
தேனொழுகும் வார்த்தைகள்
தேக்குமர இதயமும்
மெழுகாய்
உருகிவிடும் !
கரும்பாய்
காதல் மொழிகள்
இரும்பு
இதயமும்
துரும்பாய்
போயிடும் !
காதலை
படைத்த
இறைவனும்
கண்டு பிடித்து
விடலாம்...
"கலப்படமில்லா காதலை"
ஆனால்
நீ
நினைவை
நனவாக்கி
சுகத்தை
எடுத்துக்கொண்டு
சோகத்தை
விட்டுச்சென்றவன் !
நீ
செய்த
"துரோகம்"
காதலிக்கு அல்ல
காதலுக்கு !!!