உன்னோடு ஒன்றினேன்

உன்கண்கள் பேசுகின்ற
ஊர்தனிலே நானிருப்பேன்
பன்மொழிகள் காட்டுகின்றாய்
பாங்குடனே உன்னழகில் .


கன்னியுந்தன் காதலினால்
காண்கின்ற காட்சியினால்
என்மொழிகள் மறந்திடுதே ;
என்செய்வேன் சொல்லிடுவாய் .


முன்னுரையைச் சொல்லியுமே
முத்தான புன்னகையால்
நன்னெறிகள் ஊட்டுகின்றாய்
நாளுமுனைப் பாடுகின்றேன் .


உன்னதமாய் இவ்வுலகில்
உள்ளவளே ! நீவாழ்க !
உன்னோடு ஒன்றினேன் !
உன்னதமே ! வாழியவே !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-May-16, 1:18 pm)
பார்வை : 140

மேலே