வாழ்ந்து பார் அனுபவம் ருசிக்கும்

ஒருவரின் வாழ்க்கையும், வாழ்வதும்
ஒன்றும் அவ்வளவு எளிதல்ல!

நடைபெறும் காரியங்கள் யாவும்
காரணமின்றி நிகழ்வதுமல்ல!

சூரிய சந்திரன்
சுழல்வதும் அவ்வாறே!

மரங்களின் இலைகள்
உதிர்வதும், துளிர்ப்பதும்;

கோடையின் வெப்பமும்,
குளிர்காலப் பனியும்;

இயற்கையின்
சுழற்சியே!

காலங்களின்
…..மாற்றமும், சுழற்சியும்

ஞாலம் தோன்றியது
…..முதல் அவ்வாறே!

அதுபோல
வாழ்வின் இன்பமும், துன்பமும்;

வாழ்க்கையின் சுழற்சியே!
வாழ்ந்து பார்! அனுபவம் ருசிக்கும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-May-16, 8:28 pm)
பார்வை : 378

மேலே