கவிதை சொல்லும் கருத்துக்கள்

கவிதை...
நான் வார்த்தையில்
இருந்து வந்தவன்
கற்பனையில் பிறந்தவன்
எவரையும் நான்
விரும்பவில்லை...
என்னை விரும்பாதவர்கள்
இந்த உலகத்தில்
எவரும் இல்லை..

நிலவின் அழகை
பார்த்து எழுதிய எவரும்
வாழ்கையின் நிஜத்தை
பற்றி எழுதவில்லை..

என் மொழியில்
தினம் தினம்
எழுதபடுகின்றன கடிதம்
ஆனால் அதை அனுப்ப முகவரி
தான் தெரியவில்லை..

என்னை பற்றி எழுதுபவர்கள்
எல்லாம் கவிஞர்கள்
உயிரையே உருக்கும்
என்னுடைய வார்த்தைகள்

வானத்திற்கோ எல்லை
இல்லை..
காற்றுக்கோ உருவம்
இல்லை
கண்ணீர் துளிகளுக்கோ
நிறமில்லை
கஷ்டங்களுக்கு
என்னை
தவிர வேறு துணையில்லை..

என்றுமே நான்
ஒரு வளர் பிறை.
என் வார்த்தைகளுக்கு இல்லை
தேய்பிறை..
புன்னகை பற்றி
எழுதுபவர்களுக்கு
உயிர்துளியும்
நானே..
சோகத்தை பற்றி
எழுதுபவர்களுக்கு
கண்ணீர் துளியும்
நானே...

என் கருத்துக்கள்
வலிகளை குறைக்கும்
விழிகளை நனைக்கும்
என் வார்த்தைகளால்
மட்டுமே சிலரின்
இதயங்கள் துடிக்கும்...

எழுதியவர் : சபானா ஆஷிக் (31-May-16, 12:19 pm)
பார்வை : 115

மேலே