காதலுடன் - பாகம் 9
ஆன்மீகம்
எனும் சொல்லே
என் செவிகளில்
விழாது
விலகி இருப்பவன்...
அவளுக்காகவே
அனு அனுவாய் கலந்துவிட்டேன்...
ஆன்மீகத்திலும்......
நெற்றியில்
பொட்டு வைத்து
நெடும் வருடமாச்சு...
அவள்
திருக்கரங்களில்
எனக்கு திலகமிட்டாள்......
அந்த
பொன் முகத்தில்
இன்முகம் கண்டேன்...
மட்டற்ற
மகிழ்ச்சி மடைத் திறந்தது
அவளிடத்தில்......
அவள்
இதழ் தரும் புன்னகையில்
குறிஞ்சிப் பூக்கள்
பூத்துக் கொண்டே இருக்கும்...
நான்
பார்த்துக் கொண்டே இருப்பேன்
எனை மறந்து......
அவள்
இமைக்குள் இருப்பது
விழிகளா?...
வில்லில் புறப்படும்
கணைகளா?...
பார்க்கும் இதயத்தில்
பல காதல் துளை.....
அப்படி
எனைப் பார்க்காதே
அனல் வீசும்
ஈர விழிப் பார்வைகள்
ஏனோ?... செய்யுதே
சொன்னாலும்
வேண்டுமென்றேப் பார்க்கிறாள்......
காதலுடன் .......