நினைவே ஒர் சகாப்தம்

கண்கள் திறந்து
கொஞ்சம் விட்டத்தை
பார்த்தால்
கோடி நினைவலைகள்.................

கண்கள் மூடி
சாய்ந்து படுத்தால்
கனவிலும் உன் பிம்பம்

கனவிலும் நினைவிலும்
மாறி மாறி
நீ நடத்தும்
தாக்குதல்..............

காலம் முழுதும்
என்னை
கவிப்பாட வைக்கும்
அழகே.................

மொத்தத்தில் உன்
நினைவே எனக்கோர்
சகாப்தம்................

எழுதியவர் : புகழ்விழி (1-Jun-16, 3:09 pm)
பார்வை : 255

மேலே