காதல் தீயே நாஞ்சில் இன்பா

பௌதிகத்தின் வினை
விழிகளில் தாக்க
எரிந்து சாம்பல் ஆனேன்
இதயம் மட்டும் துடிக்கிறது ...

காதல் கூட்டு
அறிக்கையில் களவு தான்
இன்பம் தரும்
திருட்டு மாங்காய்
ருசிப்பது போல ....

எங்கோ ஒரு ரயில்
பயணம் ...
அவளை எனக்கு
அடையாள படுத்தியது ....

டக் டக் என
ஓடும் ரயிலின்
ஓசை எனக்கு
எதையோ சொன்னது ...

யாரும் இல்லாத
நேரத்தில்
அப்பாவின் பாக்கெட்டுகள்
இருக்கும் பணததை
திருவது போல ....

உற்று பார்த்தேன்
காற்றில் பறந்த
அவளின் துப்பட்டா
கண் அடித்தது ...

ஓடி கொண்டிருந்த
மின் விசறி
என்னை
சபிக்க தொடங்கியது ...

சினிமா விதைத்த
காம சபலம்
எனக்குள் தீயென
நிற்கும் போது
அவமானம் எப்படி
எட்டி பார்க்கும்.....

அசைந்து திரும்பினால்
இன்னும் அழகனாள்..
அருகில் சென்று
அணைத்தேன் ....

அவள் எனக்கு எதிர்ப்பு
சொல்லவில்லை
அணைத்தால் ..
.கொடுத்தால் ..

பெண்ணுக்கு தான்
ஓசை இன்றி
பாசை பேச தெரியும் ,,,
கலந்தேன்
..கடைசிவரை இணைந்தேன் ..

முடித்த பின்
மெதுவாக சொன்னால்
மும்பாயில் இருந்து
மருத்துவ சோதனைக்காக
திரும்பிக கொண்டு
இருக்கிறேன்
எனக்கு எயிட்ஸ் ....


பௌதிகத்தின் வினை
தாக்க எரிந்து
சாம்பல் ஆனேன்
இப்போதும்
இதயம் மட்டும் துடிக்கிறது ...

நாஞ்சில் இன்பா
9566274503

எழுதியவர் : (5-Jun-16, 4:23 pm)
பார்வை : 113

மேலே