சபதமேற்போம்

மரங்களை வீழ்த்தி
குளிரூட்டப்பட்ட அறைக்குள்
குடியேற விரைவோம்..

எஞ்சிய குளங்களை
குப்பை தொட்டியாக்கி
ஏரிகளை மடக்கி
அடுக்கு மாடியாக்குவோம்

அடர்ந்த மரங்களை
அடியோடு வெட்டுவோம்
இயற்கை என்னும்
இறைவனை அணுவணுவாய்
கொன்று..

அடுத்த தலைமுறைக்கு
சாபத்தை சேமித்து வைப்போம்

அதிக வெப்பத்தையும்
தண்ணீர் பஞ்சத்தையும்
உணவு பற்றாக்குறையையும்
வேதியியல் நச்சுக்களையும்
சேர்த்து வைத்து செல்வோம்
நிரந்தர சொத்தாய்..

வரமாய் பெற்ற பூமியை
சாப தேசமாக்க சபதமேற்போம்

எழுதியவர் : ஆரோக்யா (5-Jun-16, 9:11 pm)
பார்வை : 40

மேலே