சரஸ்வதி சபதம்•••

சோம்பலையே
கூத்தியாராய் கொண்டிருக்கும்
சில வாத்தியாரால்
உயர் தர கல்வி
யில்லை தரணியிலே

ராஜாங்கமாய் அரசாங்க பள்ளிக்கு போவோம்
பணம் கட்டினாலும்
இலவச படிப்பானாலும்
விரும்பி படிப்பவர்கள் மாணவர்களாகிய
நாம்தான் அல்லவா

வாங்கள் படிப்பதே இலட்ஷியமாய்
கொண்டு போவோம்
படிப்பேறவில்லை
என்றால் சாவோம்

கங்கம்மா மங்கம்மா
சபதம் இல்லை
அவங்கம்மா இவங்கம்மா
சபதம் இல்லை
உங்கம்மா எங்கம்மா
சபதம் இல்லை
நம்பம்மா சரஸ்வதி
சபதம் எடுப்போம்

எழுதியவர் : ஆப்ரஹாம் வேளாங்கண்ணி/மும (9-Jun-16, 8:07 am)
பார்வை : 96

மேலே