நற்பண்புகளை வளர்
தனியொருவரின் உணர்வுகளும்
எண்ணச் சிதறல்களும் ஒருங்கிணைந்து - அங்கே
நற்கவிதை பிறக்கிறது!
இளவயது ஆண் பெண்களிடையே ஏற்படும்
முதிர்ச்சியற்ற இனக் கவர்ச்சி - இன்னொரு
முறையற்ற உயிரை உலகுக்குத் தருகிறது!
போதையுடன் காமம் சேர்ந்தால்
மிருக உணர்வுள்ள கயவர்களை - தகாத
பாலியல் பலாத்காரம் செய்யத் தூண்டுகிறது!
பேராசையும் பதவி மோகமும் சேர்ந்தால்
தீராத ஊழல் பெருகி நமது – நாடு
முன்னேற்றம் அடையாமல் தடுமாறுகிறது!
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. குறள் - 930 கள்ளுண்ணாமை