பார் போற்றும் திருச்சி நகரம் --- ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

திருச்சி நகரத்தில் திக்கெல்லாம் கோயில்
வருந்தாது மக்களெல்லாம் வந்திங்கும் கூட
உருகொண்ட தெய்வங்க ளுத்தமனாய் மாற்றத்
திருவாய் மலர்ந்திடும் தீர்ப்பு .

தீர்ப்பாகி எந்நாளும் திண்ணமுடன் போராட
யார்வந்த போதினிலும் யாதுமாகி நின்றிடும்
கார்மேக நாயகன் காத்திடுவான் நம்மையெல்லாம்
பார்முழுதும் கேட்டிடும் பார் .


பாரினிலே அல்லாவும் பாசமுடை ஏசுவும்
ஊரினிலே பிள்ளையாரு முன்னதமாய்க் காத்தருள
மாரியது பெய்திடுமாம் மாற்றமில்லை நாட்டிலும்
சீரிய செய்கையிது சீர் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Jun-16, 4:25 pm)
பார்வை : 78

மேலே