நளினம்
உயிர் எங்கும்
புது போதையை
தூத்தி செல்லும்
உன் பெயர்.
எப்படியோ
என் வார்த்தைகளை
திருடிவிடும்
அழகிய புன்னகை .
வெட்க அலைகளை
முகமெங்கும்
பரவச் செய்யும்
நிந்தன் ஜாலங்கள் .
தன்னிச்சையை
மறந்து
கிறங்கடிக்கும்
இணை கண்கள்.
இமை பொழுதில்
உன்னுள் இழுத்து
காதல் மந்திரம்
கற்று தருகிறது
அந்த ராஜ பார்வை.
உன் முன்னே
செய்யபடு வினையாக
மாற்றம் பெறும்
என் நளினம்.
விண்மீன் போல்
எப்போதும்
என் அருகே
உன் நினைவு