சொல் மனமே சொல்
![](https://eluthu.com/images/loading.gif)
கண்களே ஏன் அவளைப் பார்த்தாய் இப்படி நினைவுகளோடு கண்ணீர் சிந்தவா ?
மனமே ஏன் அவளிடம் பேசினாய் இப்படி அவள் பேசாமல் உன்னை நோகடிக்கவா ?
கனவுகளே ஏன் அவளுடன் கனவில் உலா வந்தாய் இப்படி நிஜத்தில் உன்னை விட்டு செல்லவா ?
பூக்களே ஏன் அவளுக்கு உன்னை பரிசளிக்கும் போது பேசாமல் இருந்து விட்டாய் இப்படி என் புன்னகைகளை பறிக்கவா ?
அன்பே ஏன் அவளை மட்டும் உயிருக்கு உயிராய் நேசித்தாய் இப்படி ஒரு கல்லறையை அவள் உனக்கு கட்டவா ?
சொல் மனமே சொல் ..............?