துணிவே துணை
முடியாது என்று முயாலாமை கொண்டு
ஒடிகின்ற வில்லை ஒடியா - தடிஎன்று
ராமன் நினைத்திருந்தால் ராமா யணசீதை
மாமனென்று இல்லை அவன் .
துணிவே துணையாய் துடிப்போ டெழுந்து
அணிகின்றத் தைரியமே ஆண்மை. – பணிக்கேற்ப
தத்தம் முடிவை தயங்கா தெடுத்தாங்கு
முத்திரை குத்த முனை.
*மெய்யன் நடராஜ்

