காதலோடு

நான் நேசித்த நீதானே அது !!!!
கத்தி இன்றி ரத்தம் இன்றி வக்கிரமாய் இதயத்தை அறுத்துப்போட்டவன் நீதானே!!!!
வெற்று வார்த்தைகள் கூட தீயாய் சுடும் என்று நீ பேசும் வரை நான் உணரவில்லையே!!
எப்படி முடிந்தது உன்னால்
விசம் தடவிய வார்த்தைகளால் வேலெடுத்து வீச?
உன்-தொடுகையில்
சிலிர்த்தவளை இச்சைக்கு உணவென்றாயே....கதறியழுத கண்ணீரை நல்ல நடிப்பென்றாயே .... எத்தனை இரவுகள் கண்ணீரில் கடந்திருக்கும்?
எத்தனை பகல்கள் உன் புறக்கணிப்பு எனை குற்றுயிராக்கியிருக்கும் ?
வார்த்தை அமிலத்தில் இதயத்தை சிதைத்து அழித்தவனே!
காதலோடான கடந்த காலங்கள் அத்தனையும் காமத்தின் விளைபொருளாக்கிவிட எப்படி துணிந்தாய்?
எரிமலையாய் வெடித்து சிதறும் வலிநிறைந்த உணர்வுகளை சகித்தபடி.....
எனக்குள் எழும் விடையின்றிய கேள்விகளோடு....
வழி தொலைத்த குழந்தையாய் -நீ விட்டுச்சென்ற இடத்தில் ஏங்கித்தவித்தபடி காத்திருப்பதை தவிர என்ன செய்வேன்!

எழுதியவர் : சஞ்சனா (29-Jun-16, 1:38 am)
Tanglish : kaathalodu
பார்வை : 1874

மேலே