பிரிவு

குளிர்மிகுந்த தேசத்தின் அந்தி பொழுதொன்றில்... எனக்கான உன்னை கைகளுக்குள் சிறைப்பற்றி உடல் வெப்பம் பரிமாறி களித்திருந்த கணங்கள் ... தூரத்து வெளிச்சம் ...தொலைதூர விண்மீன்கள் ....பாதி நிலவு...
இவைதானே உன் ரசனை...
இன்ப அதிர்ச்சியாய் உன்னுடனான தொலைதூர பயணங்களில் நான்....
நீ அருகிருந்த கணங்களில் கண்டுகொள்ளப்படாமல் விட்ட அத்தனையும் இன்னும் என்னோடு இருக்க......
கண்கள் முளுதும் நிறைத்திருந்த நீ மட்டும் ஏன் பெண்ணே இன்றில்லை...
பருகும் தேனீரில் மீதி கேட்பவளே...
வாழ்க்கை பயணத்தை மட்டும் ஏனடி பாதியிலே நிறுத்திவிட்டாய்....
என் கோபங்களால் மௌனமாகிய வேளைகளை முத்தமிட்டு நிரப்பியவளே...
சத்தமின்றி எனை கதற விட்டு சென்றது ஏனடி?
தொலைபேசி நிறைக்கும் உன் குறுஞ்செய்தி இன்றில்லை .....
படிக்காமல் அழித்துவிட்ட ஆயிரம் செய்திகளில் என்ன சொல்ல வந்திருப்பாய் என்ற தவிப்புகள் தான் எஞ்சியிருக்கிறது...
அதீத அன்பை அள்ளி கொடுத்தவளே !!! இம்சை என்றேன்
புரிதலில் பிழை என்பாயே!
புரிந்தவள் நீ பிரிந்ததேனடி?
காத்திருப்புகளுக்கு தகுதியானவளே!!!
நீ தந்த காதலை நான் தருவதற்கு காத்திருக்கிறேன் வந்துவிடு.....

எழுதியவர் : சஞ்சனா (29-Jun-16, 1:44 am)
Tanglish : pirivu
பார்வை : 184

மேலே