நள்ளிரவுச் சுதந்திரம்

நாம் நள்ளிரவில்
பெற்ற சுதந்திரத்திற்கு
வயது அறுபத்தெட்டு
அந்நியனை துரத்தினோம்
கயவர்களிடம் சிக்கினோம்
இரவிலும் பகலிலும்
சுதந்திரக் காற்றில்லை
மகளிருக்கு நம்மானிலத்தில்

வீதியிலே நடந்து செல்லும்
பெண்மீது திராவக வீச்சு
ரயில் ஏறக் காத்திருக்கும்
சுவாதி கொடூரனால் கொலை
முக நூலில் முகம் காட்டிய
வினுபிரியா தற்கொலை
ஆறு வயது மழலைகள்
ஆறறிவாளர்களால் சீரழிவு

எங்கே செல்கிறது நம் நாடு
எங்கே நாம் பெற்ற சுதந்திரம்
புத்தன் பிறந்த பூமியில்
இத்தனைக் கொலைகளா
எத்தர்களின் கைகளில்
நம் நள்ளிரவுச் சுதந்திரம்
நீதியின் கண்கள் மட்டுமல்ல
கைகளும் கட்டப்பட்டுள்ளன!

எழுதியவர் : மோகனதாஸ் (8-Jul-16, 10:51 am)
பார்வை : 248

மேலே