பொறுத்துக்கொள் புதுத்தளிரே

புவியில் புதைத்தும்
விதையொன்று முளைத்தால்
பூரிப்பு விதைக்கு மட்டும்தான்
செடிக்கு அல்ல...

கண்ணில்லா கால்கள் பல
காத்திருக்கும் காலனைப்போல்

போர்வையாக வானிருந்தும்
பொரித்தெடுக்கும் பகலவனும்

பொறுத்துக்கொள் புதுத்தளிரே
தருவாகும் காலம் வரும்......

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (12-Jul-16, 6:24 pm)
பார்வை : 296

மேலே