கனவுத்தூக்கம்
எனக்கு விடியலில் கூட
கனவுத்தூக்கம்
கலைய மறுக்கிறது,
துயிலை விலக்க
என் தோழி வர விழைகிறேன்,
தொலைபேசியில் வந்தால்
இரவு பகலாகிறது, இல்லை
பகல் இரவாகவே நீடிக்கிறது.
ஆனால் என்னைத்தவிர
எல்லோரையும்
பகல் மட்டும் ஏனோ
பாடாய்படுத்துகிறது!
அதற்காகத்தானோ
எல்லோரையும்
உறங்க வைக்கும்
இரவு மட்டும் ஏனோ
விழித்துக்கொண்டேயிருக்கிறது.!!