பிரிவின் அலறலோடு நடை பயிலும் நட்பு


என்றோ ஒரு நாள்
மழைத் துளிகள் தொட்ட
மன்வாசச் சுவையோடு
மானுடத்தின் மகத்துவத்தை
சுவடுகளின் துணையோடு
சுகமாக விவாதித்து
சோகத்தின் தாக்கத்தை
இறக்கி விட்ட
பெருமூச்சோடு...
கவலைகளின் கனக் குவியலை
கரைத்துக் கொண்டதாக
நிம்மதியோடு...
உன்னோடு உறவு தேடி
உனக்குள் உண்மை தோண்டி
பதற்றமாய்
பரிச்சயமில்லாத
பயமாய் கூட..
இன்றும் கைகளைப்
பிசைந்தபடியே
நினைத்துக் கொண்டு தானிருக்கிறேன்
நம்மை இணைத்த நாட்களையும்
நமக்குள் முகிழ்த்த உறவையும்
எதிர்பார்ப்பும்
எமாற்றங்களோடும்
எப்போதும் பிரியாதிருக்கும்
நம் நட்பின்
பழைய பகிர்தல்களும்...

எழுதியவர் : அன்புபாலா (24-Jun-11, 8:35 pm)
பார்வை : 306

மேலே