வண்டு பூவின் காதல்
நான் உன்னை
ரசிக்கவில்லை ...
ருசிக்கிறேன்....
உன் அழகினில்
மயங்கி மயங்கி,
உன்னை ருசிக்க
தொடங்கிய பின்,
உன்னில் வசிக்க
தொடங்கினேன். ..
உன் மேல் கொண்ட
காதலால்....
நீ உதிரும் போது
உன்னுடன் இணைந்து
உதிர்ந்து போவேன்,,
உன் மடியிலே
மடிந்து போவேன். .
வினோ . வி