கவிதை 105 அர்த்தமற்று போனதுவே

மொழிதனில் வடித்த கவிதைகள்
உள்ளத்தை நெருடிச் சென்றனவே
விழிதனில் அரும்பிய வெண்முத்துக்கள்
என்னுள்ளே உறைந்து போனதுவே.

வீதியிலே என்னுள்மலர்ந்த காதல்
பாதியிலே துண்டிக்கப் பட்டனவே
கற்பனையில் வளர்ந்த உறவும்
சொப்பனத்தில் கரைந்து போனதுவே

ஏட்டினில் படித்த கல்வி
வீட்டினில் பயனற்றுப் போனதுவே
மதியிலே உதித்த காமம்
சதியிலே விழச் செய்தனவே

பன்மையிலே மகிழ்ந்த வாழ்வும்
தனிமையிலே சிதைந்து போனதுவே
வன்மையிலே முடிந்த கனவும்
உண்மையிலே அர்த்தமற்று போனதுவே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (27-Jul-16, 6:35 pm)
பார்வை : 92

மேலே