​ஆட்டுக்குட்டியும் நானும் ​

ஆதவன் ஒளிக்கண்டு நான் விழித்தேன்
--ஆட்டுக் குட்டி அகிலாவைத் தேடினேன் !
அருகிலே ​உறங்கிடும் அன்பான தோழியது
--கொஞ்சுவேன் அவளை கொள்ளை அழகது !
உடன்பிறந்த உயிராய் உள்ளத்தில் அவளும்
--உயிராகப் பழகும் அகிலாவும் என்னிடம் !

தாயில்லாப் பிள்ளைகள் நாங்கள் இருவரும்
--பாசமும் நேசமும் அதிகம் அதனாலே !
ஓடிவந்தது கண்டதும் என்னை திரும்பிவந்து
--பாடியது உள்ளமும் பரவசத்தில் கானமும் !
நோக்கிய கண்களால் கூறியதும் விளங்கியது
--உனக்குநானே எனக்கும் நீதானே உறவென்று !

எண்ணிப் பார்த்தேன் என்னுள் ஒருநொடி
--ஆறறிவு மனிதரைவிட ஐந்தறிவு மேலென !
இரக்கமும் நன்றியும் நிறைந்த இதயங்கள்
--இன்றும் என்றும் பிரியமான பிராணிகளே !
வேண்டுகிறேன் உங்களை அன்புடன் நானும்
--வதைகளை தடுப்பீர் வாழவும் செய்திடுவீர் !

பிராணிகளை தூக்கிப் போடும் பாவிகள்
--காட்டில் வழ வேண்டிய மிருகங்கள் !
பலிகடா ஆக்காதீர் வலிகளை உணர்வீர்
--பாவமும் செய்யாத உயிரென அறிவீர் !
வாழப் பிறந்தவை வையத்தில் அவைகளும்
--வழிவகை செய்வோம் வாழ்ந்திட நாமும் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Aug-16, 5:16 pm)
பார்வை : 141

மேலே