பணம்

பணம்

நீ என்ன பணமா
இல்லை
பகுத்தறிவுப் பகலவனா ?
உழைப்பவனை உயர்த்துகிராய்
ஊதாரியை உதருகிறாய்

மனித மதிப்பின்
அளவுகோல் மனமன்று
பணம்

வியர்வையின் பரிசு நீ
கள்வனின் காதலி நீ

கலையில் அலைகிறோம்
மலையில் அயர்கிறோம்
உன்னைத்தேடியே

பணமே ஏழைக்கு
ஏன் எதிரியானாய்
அவர்கள் உழைக்கவோ ?

உயிரின்றி வட்டி எனும்
குட்டியை ஈன்றது எப்படி ?

உன் வட்டி
வாழ்கிறது எங்கள்
உயிர்களை வெட்டி !

பணம் மட்டுமே வாழ்க்கைஎன்றால்
நாம் வாழ சில
காகிதங்கள் போதுமே
அதில் காந்தி எதற்கு ?

மனித நேயம்
என்று பணனாயகத்தை
வெல்லுமோ
அன்றே கடவுள்
காப்பதை நிறுத்திக்கொள்வார் .

எழுதியவர் : குமார் (15-Aug-16, 9:40 pm)
Tanglish : panam
பார்வை : 175

மேலே