கூர்மை கண்ணீர்

ஆத்மாவே!!!
நியாயத்திற்காக அழவில்லை?
தர்மத்திற்காக அழவில்லை?
நீதிக்காகவும் அழவில்லை?
சோகத்திற்காக ஏன்
கூர்மை கண்ணீர்
சிந்துகிறாய்?
ஆசை கொள்ளவேண்டிய விடத்தில்
கொண்டாய் மோகத்தை!!!
கொண்ட மோகத்தின் மேல்
மீண்டும் ஆசை கொண்டாய்!!!
எனில் சிந்துவதும்,
மோக ஆசையின்
கூர்மை கண்ணீர் தானோ?

எழுதியவர் : நவீன் குமார் இரா (16-Aug-16, 6:39 pm)
பார்வை : 145

மேலே