சுதந்திரம் இழந்தது இந்தியநாடு

சுதந்திரம் பெற்றோமே..!!

மனிதனாய் வாழ
சுதந்திரம் பெற்றோமே..

மரங்களை வெட்டி
மாசுவை பெருக்க
சுதந்திரம் பெற்றோமே..

ஆறுகளையும் குலங்களையும்
கழிவு கொண்டு அழித்திட
சுதந்திரம் பெற்றோமே..

வேட்டையாடி
விலங்குகளை அழித்திட
சுதந்திரம் பெற்றோமே..

தாய் நாட்டை
தரம் குறைவாய் பேசிட
சுதந்திரம் பெற்றோமே..

பணத்திற்காகவும்
பகைக்காகவும்
உயிரை கொல்ல
சுதந்திரம் பெற்றோமே..

ஊழலுக்கும் அரசியலுக்கும்
உறுதுணையாய் நின்றிட
சுதந்திரம் பெற்றோமே..

தமிழனை தமிழினத்தை
சிதைத்திட
சுதந்திரம் பெற்றோமே..

கற்புக்கு காவலாம்
இந்திய நாடு..
இன்று
தன்னாடு தன் மக்கள்
கறை படிய
சுதந்திரம் பெற்றோமே..

சுதந்திரம் பெற்றோம்
சுதந்திரம் பெற்றோம்
இந்தியனாய் நாம்
சுதந்திரம் பெற்றோம்

இழந்ததே.. சுதந்திரத்தை..
இயற்கையும் இந்தியநாடும்
இந்திய பெண்களும்..!!


குட்டி..!!

எழுதியவர் : குட்டி (20-Aug-16, 12:42 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 157

மேலே