வானளாவிய நட்பு....

வாழ்வாங்கு வாழ்க ! என -
வாழ்த்திய சொந்தங்கள் கூட
வாய்தீர குற்றம் பேசும் _ நாம்
வாழ்க்கையில் சறுக்கி விழும் நேரம்...

வாழ்ந்துகாட்டுவாய் நண்பா - நீ
வாழ்நாளில் என்றும் என - நாம்
வாழ்க்கையில் சறுக்கிய நேரமும்
வாழவைக்க நம்பிக்கை ஊட்டும் ஒரே சொந்தம்,

வானளாவி உயர்ந்து நிற்கும்
வரம்பெற்ற நட்பு மட்டும் தான்....

எழுதியவர் : ஈஸ்வர்தனிக்காட்டுராஜா.... (27-Jun-11, 1:00 pm)
பார்வை : 490

மேலே