நட்பே !

நட்பே !
காற்றாய் என் வாழ்வில் நீ வீசி போனாய்
உன்னை பிரிந்தால் என் மூச்சும் நின்றுவிடும்
பூக்களாய் என் வாழ்வில் நீ பூத்து விட்டாய்
நீ வாடினால் என் மனமும் உதிர்ந்து விடும்
நிலவாய் நீ வந்து போனதாலோ என் வானம்
சில நேரம் இருட்டிவிடுகிறது.......
மழையாய் நீ பூமிக்கு வந்ததால்
மேகமாய் இருந்த நான் கரைந்து போனேன்
பகலாய் நீ ஒளிர்ந்து நின்றாய்
இரவாய் நீ நின்று ஒளிர்ந்தாய்
கனவாய் நீ கலைந்து போனாய்
மாறாத வானிலை போல் என்று என் வாழ்வில்
நீ வாழ்ந்து போவாய் ..............
விடை சொல் நட்பே ............
விடை பெறுகிறேன் என்று மட்டும்
சொல்லாதே ....................!

எழுதியவர் : GOKILAMANI (27-Jun-11, 12:59 pm)
சேர்த்தது : கோகிலாமணி
பார்வை : 583

மேலே