உன்னை நினைத்து என்னை மறந்தேன்

​​உன்னை நினைத்து என்னை மறந்தேன்
உயிர் வாழ உன்னையே சுவாசிக்கிறேன் ...​.
உறவாக்க விரும்பி உருவாக்கத் துடிக்கிறேன்
உருவத்தை நினைத்து என்னையே இழக்கிறேன் ..

உயிராக நினைத்து உன்னை நானும்
உள்ளத்தில் வைத்தேன் ..
உலகை நினைத்து நீயோ என்னை
ஒதுக்கி வைத்தாய் ...

புன்னகைப் பூத்தே புத்துயிர் தந்தாய் நானும்
புத்துலகம் கண்டேன் ...
புதுமைகள் புரிந்திட அழைக்கிறேன் உன்னை
புறப்படு நீயும் புள்ளிமானே ...

மணக்கும் பூவனமே மனங்கவர்ந்த மரகதமே
மறுக்காமல் வந்திடுக ...
காத்துக் கிடக்கிறேன் கனவிலும் உனக்காக
கரைகிறதே காலமும் ...

சிரித்தேக் கொல்லாதே சிந்திப்பாய் சிலையே
சிறகில்லா பைங்கிளியே ...
அவசரத்தை உணர்ந்து விரைந்திடுவாய் நீயும்
ஆனந்தப் பூங்காற்றே ....

​உன்னை நினைத்து என்னை மறந்தேன்
உயிர் வாழ உன்னையே சுவாசிக்கிறேன் ...​

பழனி குமார்

( படம் வலைதளத்தில் பதிவிறக்கம் )

எழுதியவர் : பழனி குமார் (28-Aug-16, 3:04 pm)
பார்வை : 1601

மேலே