இது கிராமத்து காதல்

ஆத்தங்கர ஓரத்துல
அந்தி சாயும் நேரத்துல...
அன்ன நடையுடனே
அன்னக்கிளியவள்
அலங்கார சிலையவள்
அல்லிக் கொடியிடையாள்
அள்ளி முடித்தக் கூந்தலுடன்
அலைபாயும் விழிகளுடன்
அலாக்காக குடத்தினை
அரைவட்ட இடுப்பினில்
அழகுடனே சுமந்திட்டு
அக்கம்பக்கம் பார்வையை
அலைமோதும் ஆவலுடன்
அகதிகளாய் திரிந்திடும்
அடங்கிடா வேட்கையுடன்
அரும்பசியுள்ள ஆண்களை
அலட்சியச் சிரிப்புடனே
அபிநயக் கலையுடனே
அசைந்தாடி செல்கிறாள்
அடிமனதைத் தொடுகிறாள்
அணைத்திடத் தூண்டுகிறாள்
அடியேனுக்கும் இந்தநிலை ....!
பழனி குமார்