கடல் எனும் பிரவாகம்
கடல் எனும்
பெரும் நீர்ப்பரப்பு
தினம் தினம்
மனிதனுக்குச்
சொல்கிறது...
" வாழ்க்கை என்பது
பெரும் பிரவாகம்
அதில்
எளிதாய் நீந்திச் சுகித்தல் கடினம்.
பிரமாண்டம்
காற்றும் அலையும் அலைக்கழிப்பும்
மிதமான பயணத்திலும்
ஏற்ற இறக்கம்
முழுதாய் விழுங்கும் திமிங்கிலங்கள்
ஆழ்பரப்பின் பிரமிப்பு
நடுஇரவின் திகில்
வானுயர்ந்த ஒளி வெள்ளம்
நடுவெளியின் நிசப்தம்
.... .... .... .... "
வாழ்க்கை பெரும் பிரவாகம்...
நீந்தி தான் பார்ப்போமே...!!