மீண்டும் நம் சந்திப்பு எப்போதடி 555

என்னவளே...
என்னை கண்டதும் உன் பார்வையின்
பூக்களில் நனையவைக்கிறாய்...
தனிமையில் உன்
நினைவுகளோடு ரசித்த என்னை...
உன் பார்வை பூக்களால்
கனவுகளை கலைக்கிறாய்...
உன் தீண்டலில் என்னை புது
உலகிற்கு அழைத்து செல்கிறாய்...
உன்னோடு நான் எவ்வளவு
நேரம் பேசினாலும்...
இருவரும் பிரிந்து செல்லும்
நேரம் வந்தால் மட்டும்...
இன்னும் கொஞ்சம் நீளாதா
என்று ஏங்குதடி உள்ளம்...
நிமிடங்கள் நெருங்க நெருங்க
இதயம்கூட கெஞ்சுமடி...
உன் இதயத்தை பார்க்கிறேன்
விழிகளின் ஏக்கத்தில்...
என்னவளே மீண்டும் எப்போது
நம் சந்திப்பு சொல்லடி கண்ணே.....