கவிதை 120 மதிப்பில்லா இப்பிறவி

பயணமில்லா பாதைகள்
குண்டும் குழியுமாய் மாறிவிடும்
செயல்களில்லா சிந்தனைகள்
உள்ளத்தை அரித்துவிடும்

குடியில்லா இல்லங்கள்
சிலந்திகள் வசப்படும்
தொடர்பில்லா உறவுகள்
காலத்தால் ஒதுங்கிவிடும்

ஆதரவில்லா மழலைகள்
தெருவிற்கே வந்துவிடும்
கவனிப்பில்லா குழந்தைகள்
தறுதலையாய் மாறிவிடும்

பேச்சில்லா மொழிகள்
நாளடைவில் அழிந்துவிடும்
பயனில்லா கருவிகள்
துருவாய் குலைந்துவிடும்

அன்பில்லா உள்ளங்கள்
வேதனையில் மூழ்கிவிடும்
துணையில்லா பெற்றோர்கள்
தளர்ந்துத்தான் போய்விடுவார்

உருவமில்லா வதந்திகள்
நிம்மதியை குலைத்துவிடும்
அர்த்தமற்ற கோபங்கள்
அமைதியினை கெடுத்துவிடும்

நியமில்லா வருமானம்
வேகமாய் அழிந்துவிடும்
நேர்மையில்லா பொறுப்புகளும்
பாதாளத்தில் தள்ளிவிடும்

பண்பில்லா இதயங்கள்
பிடிவாதத்தில் சிதைந்துவிடும்
நெறியில்லா வர்த்தகமும்
சீக்கிரமே படுத்துவிடும்

மதிப்பில்லா இப்பிறவி
புரிந்து நடந்தால் செழித்தோங்கும்
நோக்கமில்லா செய்யும் உதவி
எல்லோர்க்கும் நன்மை பயக்கும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (1-Sep-16, 9:44 am)
பார்வை : 84

மேலே