இரவில் கண்டேன் எந்தன் வானவில்

நேற்று கண்டது கனவா நிஜமா என்று
எனக்கே தெரியவில்லை – என்னை
மறந்து உந்தன் அருகில் வாழ்ந்த
சில நொடிகளில் – என்
சொர்க்கப் பூமியைக் கண்டேனே உன்னால் அன்பே ….

நீயும் நானும்
மலைச்சாரல் வீச
மின்னல் ஒளியில்
யாரும் இல்லா சாலையில்
மினி மினிப் பூச்சிகள் போன்று
தெரு விளக்குகள் கண்ணடிக்க - வானவில்லாய்
நீயும் என்னருகில் நிற்க – உந்தன்
அழகில் கவிழ்ந்து விட்டேன் அன்பே…….

உன் விழிகளின் வழியே – உன்
இதயத்தில் என்னை கண்டு மயங்கி
உந்தன் மார்பில்
எந்தன் தலை சாய – என்
நெற்றியில் நீ முத்தமிட – என்னை
மறந்து உனக்குள்
சரணடைந்தேன் அன்பே ……..

எழுதியவர் : M . சரண்யா (8-Sep-16, 5:12 pm)
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே