மனித நேயம்

பெற்றவர்கள் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும்...

பணம் இருக்கிறது என்று
எந்த கவலையையும் காட்டாமல்
மறைத்து
அதிக செல்லம் கொடுத்து வளர்க்க கூடாது...

குடிப்பதே மிகப் பெரிய தவறு.
இதில் குடித்து விட்டு வாகனம்
ஓட்டுவது தண்டனைக்குரியது...
யாராக இருந்தாலும்
நீதியின் முன் நின்று
அதன் வழி நடக்க வேண்டும்...

பெண்களே
ஆண்களே
பிறந்த நாட்களில்
ஒரு கன்றை
நடுங்கள்
அது வரும் தலைமுறைக்கு
தேவை...

அநாதை இல்லங்களுக்கு
சென்று
அரவணையுங்கள்
அது உயிர்களுக்கு
அத்தியாவசியம்...

அதை விட்டு விட்டு
முக நூலில்
பெண் ஆணை தேடுவது
ஆண் பெண்ணை தேடுவது...

கூத்து கும்மாளம்
என்று நீங்கள்
கெடுவது மட்டுமில்லாமல்
தலைமுறையையும்
கெடுக்கும்
களைகளாக
உருமாறி விடாதீர்கள்...

சமுகத்தில் மனிதத் தன்மை கொண்டு வாழுங்கள்...

உயிர்களிடத்தில் உருகுங்கள்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Sep-16, 3:58 pm)
Tanglish : manitha neyam
பார்வை : 530

மேலே