காலமெல்லாம் கார்முகி

ஆதிப்பெரும் காடுகளில்
தொலைந்த பாதைகளுக்கு பிறகு
பயணமெதற்கு? பாடலெதற்கு?

ஆகப்பெரும் அற்புத
அபிநய அழகிற்கு பிறகு
கலையெதற்கு? சிலையெதற்கு?

இதழில் தீர்த்த
முத்தங்களுக்கு பிறகு
ஈரமெதற்கு? இனிப்பெதற்கு?

இமையெழிலில்
யாழிசை மீட்டிய பிறகு
இசையெதற்கு? இயற்கையெதற்கு?

பிரபஞ்சங்களற்ற
வெளிகளுக்கு பிறகு
வண்ணமெதற்கு? வானமெதற்கு?

பசிகளற்ற
கனவுகளுக்கு பிறகு
கதையெதற்கு? கவிதையெதற்கு?

நெஞ்சமெல்லாம்
நீ நிறைந்த பிறகு
உயிரெதற்கு? உலகமெதற்கு?

காலமெல்லாம் - கார்முகி
உன் புன்னகைக்கு பிறகு
காதலெதற்கு? காமமெதற்கு?

- கோபி சேகுவேரா

எழுதியவர் : கோபி சேகுவேரா (10-Sep-16, 7:28 pm)
பார்வை : 87

மேலே