நண்பன்

நான் பறக்க கற்றுக்
கொண்டபோது
வானமாக வந்தான்

நான் நீந்தக் கற்றுக்
கொண்டபோது
கடலாக வந்தான்

என் கவலைகளைக்
கவிதையாக கோர்த்தான்

இன்பத்தினை
இரட்டிப்பாக்கினான்

துன்பத்தினை தூரம்
விலக்கினான்

எங்கே தொடங்கிய உறவு
என்று தெரியவில்லை
ஆனால் தெறிகின்றது

" உயிர் உள்ளவரை
தொடரும் உண்மையான
நட்பு" என்று...!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (12-Sep-16, 7:10 pm)
பார்வை : 151

மேலே