நண்பன்
நான் பறக்க கற்றுக்
கொண்டபோது
வானமாக வந்தான்
நான் நீந்தக் கற்றுக்
கொண்டபோது
கடலாக வந்தான்
என் கவலைகளைக்
கவிதையாக கோர்த்தான்
இன்பத்தினை
இரட்டிப்பாக்கினான்
துன்பத்தினை தூரம்
விலக்கினான்
எங்கே தொடங்கிய உறவு
என்று தெரியவில்லை
ஆனால் தெறிகின்றது
" உயிர் உள்ளவரை
தொடரும் உண்மையான
நட்பு" என்று...!