பகுத்தறிவு

கட்டங்களால் காரியம் செய்தால்

நீராவியாகும்

திட்டங்களால் காரியம் செய்தால்

நீருற்று ஆகும்



குறிசொல்வதற்க்கு செவிமடுத்தால்

மடையனாவோம்

குறிக்கோளிலே கண்ணிருந்தால்

மாற்றம் காண்போம்



கைரேகையால் ஓடுவதில்லையே

வாழ்கை வளமாய்

கையின் நல்வினைகளால்

ஓடிடுமே வாழ்க்கையே வளமாய்



நிச்சயமற்ற வாழ்க்கையை

நிச்சயிக்க யாருமில்லை

நிச்சயித்து சொல்வதிலே

நீதி நிச்சயம் இருப்பதில்லை

எழுதியவர் : சே.மகேந்திரன் (19-Sep-16, 12:24 am)
Tanglish : paguttharivu
பார்வை : 276

மேலே