ஒருவரிக் கவிதைகள்

,
தாஜ்மகால்
------------------
காதல் சிறகுகளின் கலைக் கோட்டை

உலகம்
-------------
மொத்த உயிர்களின் யுத்த உருண்டை

விழிகள்
-------------
சலனத்தை மூளைக்குச் சொல்லும் ஒற்றன்

சூரியன்.
-------------
பசுமையை பரிசாக்கும் வானத்தின் கர்ணன்

நீரருவி
----------------
ஒளவைப் பாட்டியின் அவிழ்ந்த கூந்தல்.








தமிழ் அற்புதமான அமிழ்து. இரண்டே சொற்களிலும் ( ஆத்திச்சூடி) உலகை திரும்பிப் பார்க்கவைத்த தமிழ். ஒன்றரை அடியில் (திருக்குறள்) உலகையே அளந்த தமிழ். அந்த அருந்தமிழ் சொற்களில் பாவியற்ற ஆயிரம் யுகங்கள் வேண்டும். அவை இருக்கும் மொழியுடன் நாம் இருப்பதே நமக்குப் பெருமை.


மரபுக்கவிதையில் சொல்ல முடியாத நிலையில் கொடுக்கப்பட்ட தலைப்புக்கு புதுக்கவிதை பாணியில் , நான்கே சொற்களில் நான் படைத்த சில சொற்கோர்வைகள்.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (24-Sep-16, 4:28 pm)
பார்வை : 194

மேலே