மார்பிள் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

மந்தகாச மாய்ப்பார்க்கும் மார்பிள் விநாயகனின்
சுந்தரத் தோற்றமே சொக்கவைக்கும் - இந்நேரம்
கந்தனின் அண்ணன் கஜமுகனை ஆராதித்(து)
எந்நாளும் இன்பம் பெறு! 1 *

சுந்தரத் தோற்றமதில் சொக்கவைக்கும் நம்துணைவன்
மந்தகாச மார்பிள் விநாயகன் - பந்தமாகப்
பார்த்தாலே என்றும் பரவசம்தான் இன்பமெலாம்
சேர்ந்தே வருமென்று நம்பு! 2 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-16, 12:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே