மார்பிள் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்
மந்தகாச மாய்ப்பார்க்கும் மார்பிள் விநாயகனின்
சுந்தரத் தோற்றமே சொக்கவைக்கும் - இந்நேரம்
கந்தனின் அண்ணன் கஜமுகனை ஆராதித்(து)
எந்நாளும் இன்பம் பெறு! 1 *
சுந்தரத் தோற்றமதில் சொக்கவைக்கும் நம்துணைவன்
மந்தகாச மார்பிள் விநாயகன் - பந்தமாகப்
பார்த்தாலே என்றும் பரவசம்தான் இன்பமெலாம்
சேர்ந்தே வருமென்று நம்பு! 2 *