தந்த விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

குன்றத்தில் நின்றிருக்கும் கோமானின் அண்ணனை
மன்றத்துத் தந்த விநாயகனை - உன்நற்
கருமம் முடிக்கும் கரியவனை முந்தி
அருமையுடன் போற்றித் துதி! 1

தந்த விநாயகனைத் தாள்பணிந்து கும்பிட
எந்நாளும் பங்கமில்லை என்றிவனை - பந்தமொடு
கன்னலன்ன அண்ணலின் கால்பற்றித் தொண்டுசெய்வீர்;
இன்னல் அறுப்பான் இனிது! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Oct-16, 3:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே