நான் பத்தினிடா

ஏம்மா இவ்வளவு நேரங் கழிச்சு வீட்டுக்கு வர்ற?
@@@@@
டேய் கோலப்பா, நா பத்தினிடா. என்னையாடா நீ சந்தேகப்படற?
@@@@@@
ஏம்மா வெற்றிக்கொடி நீ நாலஞ்சு பேருகூட கல்யாணம் பண்ணிக்காம அஞ்சு வருசம் மாறி மாறி குடும்பம் நடத்தினவ. கடைசில உன்னோட வலைல நா மாட்டிட்டேன். உன்னோட அழகில மயங்கிட்டேன். என்னோட வசதியைப் பாத்துட்டு என்ன மயக்கி கல்யாணம் பண்ணிட்ட. நீ பத்தினியா வெற்றி?
@##
ஆமாண்டா கோலு. நா பலபேருகூட கல்யாணம் செஞ்சுக்காம குடும்பம் நடத்தினவதான்டா. சிவப்பு விளக்குப் பகுதி அனுபவம்கூட எனக்கு உண்டுடா. ஆனா நா திருந்தி வாழ எண்ணித்தான்டா உன்ன மயக்கி நா கல்யாணம் பண்ணிட்டன்டா கோலப்பா. நா பலபேருகூட கல்யாணம் இல்லாம குடும்ப வாழ்க்கை நடத்தினவதான்டா. பணக்காரங்கள வலச்சுப் போட்டு அவுங்க பணம் கறந்து பணக்காரிகளான பெண்கள் என்னப் போல வாழ்ந்திருந்தா அவுங்களப் பத்தி யாரும் ஒண்ணும் சொல்லறதில்ல. அந்த மாதிரி பணக்காரிங்களப் பத்தி தப்பா பேசினா கம்பி எண்ண வச்சுருவாங்க. நா வசதி இல்லாதவதானே. எளக்காரமாப் போயிட்டேன். உன்னக் கல்யாணம் செஞ்சதுக்கப்பறம் நா ஒழுக்கமா தாண்டா இருக்கறேன். நா உன்னோட பத்தினிடா.
@@@@
எனக்கு சின்ன வயசிலேயே காது குத்திட்டாங்க வெற்றி. உங் கதை தெரிஞ்சுதான் உன்னக் கல்யாணம் பண்ணிட்டேன். பலபேருகூட வாழ்ந்த நீ எப்பிடி வெற்றி உன்னப் பத்தினின்னு சொல்லற?
@@@@@@
அட மடையா கோலப்பா, சட்டப்படி நா உன்னோட பத்தினிடா! நாம பதிவுத் திருமணம் பண்ணீட்டவங்க. அத மறந்திடாத கோலா.
@##ஃ
அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ பத்தினின்னு சொல்லறதுதான நல்ல நகைச்சுவையா இருக்குது.
@@@@@@
நீ வடிகட்டின முட்டாளுங்கறத அடிக்கடி நிரூபிக்கறடா கோலு.
@#####
நா உன்னக் கல்யாணம் பண்ணிட்டதுதான் நாஞ் செஞ்ச முட்டாள்தனம்: மடத்தனம்.
@@@@@@@@@@
மடையா முட்டாளுச் செலலம் கோலப்பா, நான் கற்புக்கரசின்னு உங்கிட்ட எப்பவாவது சொல்லி இருக்கறனா? இல்ல. நாஞ் சட்டப்படி உன்னோட பத்தினிதாண்டா.
@@$$
உங் கதை தெரிஞ்சவங்க யாராவது உன்னப் பத்தினின்னு சொலுவாங்களா?
@@@@@@@
சொல்லுவாங்கடா கோலா.
@@@@
அப்பிடியா?
@@@@@
ஆமாண்டா கோலு, கோலா, கோலப்பா. இந்தில 'பத்னி'-ன்னா 'மனைவி'- ன்னு அர்த்தண்டா மடப்பயலே கோலப்பா.
@@@@@
அய்யோ வெற்றக்கொடிச் செல்லம், என்ன மன்னிச்சுக்கா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@மேலே உள்ள படத்திற்கும் கதைக்கும் தொடர்பில்லை