மழலை நிலா சிரிக்கிறது

மழலை நிலா சிரிக்கிறது

மழலை நிலா சிரிக்கிறாயாடி
மனதில் மழை பொழிகிறாயடி
ஒரு நிலா தந்த நிலவே
கனாக் கண்ட நினைவாய்
கையில் விரிந்த புத்தகமே !
உனைத் தழுவும் பொழுதினிலே
உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளுதடி
உனை முத்தமிடும் போதினிலே
என் மனம் போதையில் ஆடுதடி
கண் சிமிட்டும் சின்ன மின்மினியே
நான் எழுதிய கவிதை ஓவியமே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Oct-16, 9:44 am)
பார்வை : 172

மேலே