சிரிக்க, சிந்திக்க

ஒரு ஜோதிடன் வீட்டில் ஜோதிடம் பார்க்க
வந்தவர் ஜோதிடனுடன் உரையாடல்
----------------------------------------------------------------------------

ஜோதிடம் பார்க்க வந்தவர் : ஐயா ! ஜோதிடரே வணக்கம்

ஜோதிடர் : வணக்கம் வாங்க உட்காருங்க

பார்க்க வந்தவர் : ஜோதிடரே ரொம்ப நாளா ஒங்கள ஒன்னு கேக்கணும்னு
நினைச்சிட்டிருக்கேன் ; இன்னிக்கு கேட்டு விடுவோம்னு
எண்ணம்................ என்ன.. கேக்கலாமா ஜோதிடரே

ஜோதிடர் : தாராளமா கேளுங்க

பார்க்க வந்தவர் : ஐயா எனக்கு தெரிஞ்சு இருபது வருஷமாய்
உங்க கிட்ட ஜோதிடம் பார்க்க வந்திட்டு இருக்கேன்
நீங்க மட்டும் மாறவே இல்லை; இன்றைய தினத்தில்
ஜோதிடர்கள் எல்லாம் லேப்டாப்,மொபைல் போன்
கார் பங்களா வசதியோட இருக்காங்க , நீங்க
மட்டும் மாறலை ;அதே வாசல் வெளியில் ஓரும் உண்டியல்
அதில் ஜோதிடம் பார்த்து த்ரிப்தியோடு போறவங்க என்ன
காசு போடறாங்களோ அதோடு களான வாய் விட்டு கேப்பதிலையே
எங்க ஜோசியரே
ஜோதிடர் : அய்யா ஜோதிடம் வேதம் தந்த அறிய பொக்கிஷம்
அதை வைத்து பெரிய வியாபாரம் செய்தல் ஆகாது;
அன்று அன்று பிக்ஷை எடுத்து வாழும் துறவிபோல
ஜோதிடனும் தானாக இசைந்து தரும் காசை ஏத்துக்கணும்
ஜோதிட வாக்கை விலைக்கு விற்க முடியாதுங்க
பஞ்சாங்கம், ஒரு நோட்டு புத்தகம் இதுவே எனக்கு தேவை
இங்கு பகட்டுக்கு இடம் இல்லையே

பார்க்க வந்தவர் : ஓ அப்படிங்களா ! ஜோதிடர் இலக்கணம் புரிஞ்சுதுங்க
இப்போது புரியுது என் சில நல்ல புலமைமிக்க ஜோதிடர்கள்
வாழ்க்கையில் பெரும் செல்வன் ஏதும் திரட்டலையே னு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Oct-16, 8:29 am)
பார்வை : 462

மேலே