மன வீதியில்
கவிதை வானில் கனவுகளை எழுதுகிறேன்
கடலின் அலைகளில் ராகங்களை ரசிக்கிறேன்
நினைவுப் பொழிலில் தாமரையாய் விரிக்கிறேன்
மாலைப் பொழுதினில் மனதை இழக்கிறேன்
மஞ்சள் பொழிவினில் நெஞ்சில் நனைகிறேன்
மனவீதியில் சொல்லிலாக் கவிதையாய் மௌனத்தில் நடக்கிறேன் !
----கவின் சாரலன்