தூவானம் தூவ தூவ

உன் விரல் எனைத் தொடும் நேரத்தில்,
தொடுவானம் வரை பறந்து போகிறேன்,
தூவானம் எனை மெல்ல நனைக்க .
உன் துப்பட்டாவில் வந்து விழுகிறேன்...தலை துவட்ட!!

உன் வியர்வைக் கலந்த காற்றடித்ததில் ,
கொஞ்சம் வியர்த்தும் போகிறேன்...காதலால்!
உன் ஆடையின் இறுக்கங்கள் ,
ஆசைக்கு கடிவாளம்போட,
மனம் மட்டும் ஓட நினைக்கிறது....உன்னை சுமந்து கொண்டு!!

தோழியாய் இதயத்தில் கருத்தரித்து,
தாலிக் கொடிப்பந்தத்தில் தாயாய் ஜனித்துவிட்டாய்......கண்மணியே!!

பாய்கள் கடந்தும்,
சேய்கள் கடந்தும்,
இறுதிவரை உடனிருப்பேன்...உன் கைரேகையின் ஆயுளாக!!

எழுதியவர் : பாரதி பறவை (20-Oct-16, 3:40 pm)
பார்வை : 90

மேலே